எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மிக விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமெனவும் ரஞ்சித் செய்ஷா மேலும் குறிப்பிட்டுள்ளார்.